
சோபிக்க வில்லை
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சோபிக்கவில்லை. அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து கொண்ட கோலி, வழக்கம்போலவே சிறப்பாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 42வது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார்.

42வது ஓவரில் அவுட்
ஷ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன்களை சேர்த்தார் கோலி. 120 ரன்கள் குவித்து 42வது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்திய அணி கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 279 ரன்களை குவித்து டக்வொர்த் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அரைஜடன் சாதனைகள்
இந்த சதத்தின் மூலம் அரைடஜன் சாதனைகளை வாரி குவித்தார் விராட் கோலி. தனது ஆட்டம் குறித்து பேசிய விராட் கோலி, சில முக்கிய விஷயங்களையும், ஏற்படும் நெருக்கடிகளையும் பகிர்ந்து கொண்டார்.

மிகுந்த சோர்வு
அவர் கூறியிருப்பதாவது: உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் 60-65 ரன்கள் அடித்திருந்தபோதே மிகவும் சோர்வடைந்துவிட்டேன். ஆனால் அந்த நேரத்தில் அணி இருந்த சூழலில், நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய கட்டாயம் இருந்தது.

எனர்ஜி வரும்
தொடக்க வீரர்கள் சோபிக்கவில்லை. அணியின் சூழல் அப்போது மிகுந்த சிக்கலாக இருந்தது. அதை எல்லாம் கருத்தில்கொண்டால், நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் எங்கிருந்தாவது எனர்ஜி கிடைத்துவிடும் என்றார்.


Click it and Unblock the Notifications











