
கோலி கருத்து
அஸ்வினின் புறக்கணிப்பு சர்ச்சையானது. ஆனாலும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா. அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் கோலி. அப்போது அவர் பேசியதாவது:

சரியாக வீசுவார்
இந்தியாவிற்கு வெளியே மிகவும் துல்லிய, நிலையான பவுலர் ஜடேஜா. அதனால் தான் ஜடேஜாவை ஆடும் லெவனில் எடுத்தோம். ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமாக இல்லாத சூழலிலும் அவர் சரியான ஏரியாக்களில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர் ஜடேஜா.

ஜடேஜாவின் பலம்
அனைத்து வகையிலும் தமது பங்களிப்பை திறம்பட செய்து கொண்டிருக்கிறார். அது தான் ஜடேஜாவின் பலம். அணிக்காக எப்போதுமே பங்களிப்பு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

எனது பணி சுலபம்
அவர் பந்து வீசுவதற்கான தருணத்திற்காக காத்துக்கொண்டே இருப்பார். அது மாதிரியான ஒரு வீரர் அணியில் இருக்கும்போது என் போன்ற கேப்டனின் பணி ரொம்ப சுலபம் என்றார்.


Click it and Unblock the Notifications