
இங்கிலாந்து சுற்றுப்பயணம்
இந்திய வீரர்கள் அனைவரும் வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்துக்கு தனி விமானம் மூலம் புறப்படுகின்றனர். அதற்கு முன்னதாக 14 நாட்கள் அவர்கள் குவாரண்டைனில் இருப்பதற்காக மும்பையில் பிசிசிஐ பயோ பபுள் ஏற்படுத்தியிருந்தது. இதற்காக கடந்த 19ம் தேதி இந்திய வீரர்கள் பபுளில் இணைந்தனர். ஆனால் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஏற்கனவே மும்பையில் உள்ளதால் அவர்கள் ஒரு வாரம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

மொத்த அணியும் இணைந்தது
இந்நிலையில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இன்று பிசிசிஐ-ன் பபுளில் இணைந்தனர். இந்த பபுள் ஆனது மும்பை விமான நிலையம் அருகில் உள்ள ஹயாத் ஹோட்டலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போல கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள விருதிமான் சாஹா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தான் பபுளில் இணைந்தனர் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் அணி
ஆடவர் அணியை போல இந்திய மகளிர் அணியும் இன்று பிசிசிஐ-ன் பபுளில் இணைந்துள்ளது. இந்திய மகளிர் அணியானது வரும் ஜூலை 16ம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி, மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்காக அவர்கள் மும்பையில் 8 நாட்கள் குவாரண்டைனில் இருக்கவுள்ளனர். இரு அணிகளும் சேர்ந்துதான் வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்துக்கு பயணிக்கவுள்ளது.

குடும்பத்தினர் நிலை
இந்திய ஆடவர் அணிக்கான தொடர் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 3 மாத நீண்ட சுற்றுப்பயணம் என்பதால் வீரர்களின் குடும்பத்தினரையும் இங்கிலாந்து அழைத்து செல்ல பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதற்காக அவர்கள் விரைவில் வரவழைக்கப்பட்டு பபுளுக்குள் இணைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











