Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுதந்திர தின விழா.. என் இந்திய தேசம் இது.. நாட்டுப்பற்று உடன் விராட் கோலி, ரோகித் சர்மா வாழ்த்து

மும்பை: இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விராட் கோலி, ரோஹித் சர்மா, அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட விளையாட்டுப் பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சுதந்திரம், ஒற்றுமை, தியாகம் மற்றும் தேசப் பற்று குறித்து அவர்கள் தங்களின் நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவுடன் இணைந்துவருவது கூடுதல் சிறப்பம்சமாகும்.

Virat Kohli Rohit

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இனிய சுதந்திர தின வாழ்த்துகள். நம்மை ஒன்றிணைக்கும் சுதந்திரம், நம்மை அடையாளப்படுத்தும் பன்முகத்தன்மை மற்றும் நம்மை முன்னோக்கிச் செலுத்தும் கனவுகளைக் கொண்டாடுவோம். வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் ஒரு பாரதத்தை நாம் தொடர்ந்து உருவாக்குவோம். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.

IND vs SL: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதே எங்கள் இலக்கு.. கில் கருத்து

IND vs SL: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதே எங்கள் இலக்கு.. கில் கருத்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய அணி சீருடையில் இருக்கும் தனது புகைப்படத்தைப் பகிர்ந்து, "எப்போதும் தேசியக் கொடியை ஏந்துவதில் பெருமிதம் கொள்கிறேன். அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, "தேசியக் கொடி ஏறுவதைப் பார்த்து நின்ற தருணத்தை என்னால் மறக்க முடியாது.

இந்த சுதந்திர தினத்தில், இந்தியாவின் ஒவ்வொரு குழந்தைக்கும் விளையாடுவதற்கான உரிமையும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏனெனில், விளையாடுவது மகிழ்ச்சி. விளையாடுவது சுதந்திரம். ஒவ்வொரு குழந்தையும் இந்த இரண்டையும் பெற தகுதியானவர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண், "இனிய சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரத்தின் மாண்பைக் கொண்டாடுவோம், நமக்காக சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களின் தியாகங்களை மதிப்போம். மேலும் வலிமையான, ஒன்றுபட்ட மற்றும் முற்போக்கான இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பங்களிப்போம். ஜெய் ஹிந்த்!" என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், "அனைவருக்கும் 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா, "நமது அடையாளம் மூவர்ணக் கொடியின் வண்ணங்களில் பொதிந்துள்ளது. 80 ஆண்டுகள் சுதந்திரம், எண்ணற்ற தியாகங்கள்.அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஓய்வை அறிவித்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெருமைமிக்க தருணங்களை நினைவு கூர்ந்து, "என் வாழ்க்கையின் மிக பெருமையான தருணங்கள் இந்திய சீருடையை அணிந்திருந்தபோது தான் கிடைத்தன. எனக்குக் கனவையும், அதைத் துரத்துவதற்கான வாய்ப்பையும், நம்பிக்கையையும் கொடுத்த இந்த தேசத்திற்கு வாழ்த்துகள். அனைவருக்கும் 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினம் அன்று இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய போட்டிகளின் முடிவு என்ன?

Also Read

சுதந்திர தினம் அன்று இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய போட்டிகளின் முடிவு என்ன?

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், "அவர்களின் தியாகம். நமது சுதந்திரம். நமது பொறுப்பு இந்தியா. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.

Story first published: Saturday, August 15, 2026, 13:28 [IST]
Other articles published on Aug 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+