For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித், விராட் கோலி ஆகியோர் இங்கிலாந்துக்கு சென்று விளையாட வேண்டும்.. முன்னாள் வீரர் கருத்து

மும்பை: இந்திய பேட்டிங் ஜாம்பவான்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி எதிர்காலம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் திஸ்குப்தா தெரிவித்துள்ளார். தற்போது டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு எடுத்துள்ளனர்.

இதை அடுத்து உலகக் கோப்பை 2027-ல் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அப்போது 40 வயதை நெருங்கியிருக்கும். இதனால் இருவரும் விளையாட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ரோகித், விராட் கோலி குறித்து யாருக்கும் அந்த உரிமை இல்லை."

Virat Kohli and Rohit sharma

"அவர்கள் எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. எனவே அவர்கள் எப்போது நிறுத்த வேண்டும் என்று சொல்ல நாம் யார்? அவர்கள் நிறுத்தும்போது நிறுத்துவார்கள். இது முழுக்க முழுக்க அவர்களைப் பொறுத்தது. ஆனால், தேர்வு என்று வரும்போது, நாம் ஒரு செயல்திறன் சார்ந்த துறையில் இருக்கிறோம்."

"நீங்கள் விளையாடி கொண்டே இருந்தால், நீங்கள் அணியில் தொடர்வீர்கள். இதில் எந்த இரு வழியும் இல்லை. சமீபத்தில் ரோஹித்தை பார்க்கும் போது, அவர் உடற்தகுதியுடன் இருக்கிறார், சுறுசுறுப்பாகவும், வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள தயாராகவும் இருக்கிறார். இவர்கள் ஓய்வு பெற வேண்டும்' என்று மக்கள் சொல்லும்போது எனக்கு சற்று எரிச்சல் ஏற்படுகிறது. அதாவது, அப்படி எதையும் பரிந்துரைக்க நாம் யார்?"

"உதாரணமாக, ஐபிஎல் இரண்டு மாதங்கள் இருக்கும். பின்னர் அவர்கள் 7-8 ஒருநாள் போட்டிகளை விளையாடுவார்கள். இதற்கு இடையில், விஜய் ஹசாரே இருக்கிறது. பின்னர், அவர்கள் விரும்பினால், இங்கிலாந்தில் 50 ஓவர் போட்டிகளை விளையாடலாம். எனவே, கிரிக்கெட் விளையாடுவதற்கு விருப்பங்கள் உள்ளன."

"தென்னாப்பிரிக்காவுக்கோ அல்லது ஆஸ்திரேலியாவுக்கோ சென்று 50 ஓவர் போட்டிகளை விளையாடுவது சாத்தியமா என்று தெரியவில்லை, ஆனால் இங்கிலாந்தைப் பொறுத்தவரை, அது நிச்சயமாக விளையாடலாம். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் உள்ள விதிகள் பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை, ஆனால் முக்கியமான விஷயம் பசி. அவர்களுக்கு போதுமான பசி இருந்தால், அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள்," என்று திஸ்குப்தா தெரிவித்தார்.

Story first published: Thursday, September 4, 2025, 23:11 [IST]
Other articles published on Sep 4, 2025
English summary
Virat Kohli and Rohit sharma should be Playing in England says Akash chopra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+