ரோகித், விராட் கோலி யார் பெஸ்ட் ? பிசிசிஐ சொன்ன முக்கிய தகவல்.. என்ன பதில் வந்தது தெரியுமா?
மும்பை: இந்திய கிரிக்கெட்டில் தற்போது இரண்டு தூண்களாக விளங்க கூடியவர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா.
இதனால் இரு வீரர்களின் ரசிகர்கள் யார் சிறந்த வீரர்கள் என்று அடிக்கடி சண்டை போட்டு கொள்வார்கள்.
விராட் கோலி உலகின் முதல் நிலை வீரராக வலம் வந்தாலும், ரோகித் சர்மாவும் பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர் ஒருவர் பிசிசிஐ பொருளாளர் அருண் துமாலிடம் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதற்கு அவர், நாங்கள் அப்படி எல்லாம் பார்க்க மாட்டோம். எங்களுக்கு எல்லாம் ஒன்று தான். இது இப்போது அல்ல. கவாஸ்கர் காலத்தில் இருந்தே அப்படி தான் நடக்குது. கவாஸ்கர் சிறந்தவரா, கபில் தேவ் சிறந்தவாரா என்ற போட்டி நடந்தது.
அதன் பிறகு ரசிகர்கள் சச்சின் சிறந்தவரா, கங்குலி சிறந்தவரா என்று போட்டி போட்டனர். ஆனால், தற்போது இணையத்தளத்தில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயைத்தளத்தில் எல்லையில்லா சுதந்திரம் இருக்கிறது.
அதனால், அவர்கள் நினைத்தது எல்லாம் பேச முடியும். ஆனால் பிசிசிஐயை பொறுத்த வரை அனைத்து வீரர்களுக்கும் ஆதரவு தரும். ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இதுவரை 82 இன்னிங்சில் இணைந்த விளையாடி இருக்கிறார்கள். இதில் 4914 ரன்கள் அடித்து தற்போது தரவரிசையில் 8வது இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications