
அரைசதம்
42 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா பெவிலியன் திரும்ப , நட்சத்திர வீரர் சுப்மன் கில் சதம் அடித்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த விராட் கோலி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 128 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 59 ரன்கள் சேர்த்து களத்தில் ஆட்டம் இழக்காமல் நிற்கிறார்.இதில் 5 பவுண்டரிகளும் அடங்கும்.

5வது இடம்
கோலிக்கு துணையாக ஜடேஜா 54 பந்துகளை எதிர்கொண்டு 16 ரன்களுடன் இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்து 191 ரன்கள் பின் தங்கி உள்ளது. இந்த இன்னிங்சின் போது விராட் கோலி இன்று இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறார். சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

மைல்கல்
மேலும் 50வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி 4000 ரன்களை என்ற மைல் கல்லை கடந்துள்ளார். இதில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 94 டெஸ்ட் போட்டியில் விளையாடி 7216 ரன்கள் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் நான்காவது இடத்தில் களமிறங்கி அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை சேர்த்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இந்த சாதனையை 193 இன்னிங்ஸில் விராட் கோலி படைத்திருக்கிறார்.

அதிவேகம்
சச்சின், காலிஸ் 193 இன்னிங்ஸில் தான் 9000 ரன்களை கடந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் அடித்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போது வெறும் 41 ரன்கள் தான் அவருக்கு சதம் பூர்த்தி செய்ய தேவைப்படுகிறது. ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் நிலையில் விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











