பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 2வது முறையாக விராட் கோலி சதம் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால், பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிடும்.
குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில், டாசை இழந்த ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. இதனையடுத்து, பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் ஆர்சிபி அணி விளையாடியது.

இதில், டுபிளசிஸ் 19 பந்துகளில் 28 ரன்கள் சேர்க்க, மேக்ஸ்வெல் 11 ரன்களில் வெளியேற, மஹிபால் லோம்ரர் ஒரு ரன்னில் வெளியேற ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் இழந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
கோலிக்கு பிராஸ்வெல் 5 பவுண்டரிகளை அடித்து 26 ரன்கள் சேர்த்து வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 17வது முறையாக டக் அவுட்டாகி ரசிகர்களை வெறுப்பேற்றினார். எனினும் விராட் கோலி தனி ஆளாக நின்று 61 பந்துகளில் சதம் எடுத்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 7 சதம் அடித்து, அதிக முறை சதம் அடித்த கெயில் சாதனையை கோலி முறியடித்தார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.