For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2011 உலக கோப்பை வெற்றி... சச்சினுக்கு முதல் மரியாதை... காரணம் சொல்கிறார் விராட் கோலி

மும்பை : கடந்த 2011ல் உலக கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி. இந்த வெற்றியை அடுத்து சச்சின் டெண்டுல்கருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது.

Recommended Video

England's squad for 1st test vs Pakistan

விராட் கோலி உள்ளிட்ட அணி வீரர்கள், சச்சின் டெண்டுல்கரை தங்களது தோள்களில் தூக்கி சுமந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்திய அணியின் பல வெற்றித் தருணங்களின் காரணமாக சச்சின் டெண்டுல்கர் இருந்ததே, அவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டதற்கான காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

500 விக்கெட்டுகளை வீழ்த்தறது இனி யாருக்குமே முடியாத காரியம்.. ஸ்டூவர்ட் பிராட் திட்டவட்டம் 500 விக்கெட்டுகளை வீழ்த்தறது இனி யாருக்குமே முடியாத காரியம்.. ஸ்டூவர்ட் பிராட் திட்டவட்டம்

28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி

28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி

கடந்த 2011ல் உலக கோப்பை தொடரை 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2வது முறையாக வெற்றி கொண்டது. தோனி தலைமையிலான இந்திய அணி, அதிகமான இளம் வீரர்களை கொண்ட அணி, இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது. தன்னுடைய கேரியரில் ஒருநாள் உலக கோப்பை வெற்றியை சுவைக்க வேண்டும் என்ற சச்சின் டெண்டுல்கரின் கனவு இதன்மூலம் நனவானது.

சச்சினுக்கு முதல் மரியாதை

சச்சினுக்கு முதல் மரியாதை

இந்திய அணி இரண்டாவது முறையாக பெற்ற இந்த உலக கோப்பை வெற்றியில் சச்சின் டெண்டுல்கருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. இளம் வீரர்கள் விராட் கோலி உள்ளிட்டவர்கள் சச்சின் டெண்டுல்கரை தங்களது தோள்களில் சுமந்து கொண்டு மைதானத்தில் வலம் வந்தனர். இதனிடையே, சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக வழங்கியது அதிகம் என்பதாலேயே முதல் மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

சச்சினின் இறுதி வாய்ப்பு

சச்சினின் இறுதி வாய்ப்பு

மயங்க் அகர்வாலுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற விராட் கோலி 2011 உலக கோப்பை வெற்றி கொண்டாட்டம் குறித்து பகிர்ந்து கொண்டார். இந்த வெற்றியை அடுத்து தான் உண்மையான மகிழ்ச்சியை அடைந்ததாகவும் அனைவரது கவனமும் சச்சின் டெண்டுல்கரை சூழ்ந்ததாகவும் குறிப்பிட்டார். ஏனெனில், அவருக்கு உலக கோப்பை வெற்றியை பெறுவதற்கு அது இறுதி வாய்ப்பாக இருந்ததாகவும் விராட் தெரிவித்துள்ளார்.

முதல் மரியாதைக்கு காரணம்

முதல் மரியாதைக்கு காரணம்

இந்தியாவின் பல்வேறு வெற்றித் தருணங்களின் சாட்சியாக இருந்துவந்த சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய ஆட்டத்தின்மூலம் இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார் விராட் கோலி. இத்தகைய காரணங்களால் மட்டுமே சச்சின் டெண்டுல்கருக்கு உலக கோப்பை வெற்றியின் முதல் மரியாதை கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, July 29, 2020, 17:00 [IST]
Other articles published on Jul 29, 2020
English summary
Virat Kohli revealed why they had given the victory lap to Tendulkar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X