திரும்ப வந்துட்டேனு சொல்லு.....ஆரம்பமே அமர்களம்... ஐபிஎல் ஏலத்தில் அட்டகாச அறிவிப்பு
சென்னை: 14வது ஐபிஎல் தொடரின் ஸ்பான்சராக யார் இருப்பார் என எதிர்பார்ப்பு எகிறி வந்த நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது.
Recommended Video

14வது ஐபிஎல் தொடரின் மினி ஏலம் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இதில் 292 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏலத்தின் முதல் அறிவிப்பாக இந்தாண்டு ஐபிஎல்-ன் ஸ்பான்சர் யார் என்பது வெளியிடப்பட்டுள்ளது.

ஐபில் தொடர்
இந்தியாவில் திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பு வழங்கவேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட்டை மேம்படுத்தவும் இந்தியன் ப்ரீமியர் லீக் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் மிகவும் பிரபலமான உள்நாட்டு தொடர்களில் ஐபிஎல்-ம் ஒன்று.

ஸ்பான்சர் யார்?
ஏலம் குறித்த பரபரப்பு ரசிகர்கள் இடையே எழுந்திருந்தாலும், அதனை விட இந்தாண்டுக்கான ஸ்பான்ஸர் யார் என்பதே மிகப்பெரும் கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு விவோ நிறுவனம் தான் ஸ்பான்ஸர் என ஐபிஎல் கவுன்சில் சேர்மன் ப்ரிஜேஷ் பட்டேல் அறிவித்தார்.

ஐபிஎல்-ல் விவோ
ஐபிஎல் தொடரில் பெப்சி நிறுவனத்திற்கு மாற்றாக விவோ நிறுவனத்திடம் கடந்த 2018 முதல் 2022 ஆண்டு வரை ஸ்பான்ஸர் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி ஆண்டு ஒன்றுக்கு அந்நிறுவனம் ரூ. 440 கோடி வழங்குகிறது.

2020 ஐபிஎல்
5ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் கடந்தாண்டு ஐபிஎல்- க்கு மட்டும் விவோ ஸ்பான்ஷர்ஷிப்பில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக கடந்தாண்டு ட்ரீம் 11 நிறுவனம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications