For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் ரோஹித் தூள் கிளப்பிட்டார்.. என்ன சுறுசுறுப்பு! என்ன தெளிவான திட்டம்! அடடடா!!

மும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன், ரோஹித் சர்மாவின் டி20 கேப்டன் பணி பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக தலைமை ஏற்றார்.

மூன்று போட்டிகள் கொண்ட அந்த தொடரை 3-0 என அசத்தலாக கைப்பற்றினார். அதை தொடர்ந்து ரோஹித்துக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

பாதி நேர கேப்டன் ரோஹித் சர்மா

பாதி நேர கேப்டன் ரோஹித் சர்மா

விவிஎஸ் லக்ஷ்மன் ரோஹித்தின் கேப்டன் பணி பற்றி பேசினார். "நான் ரோஹித்தின் தலைமையை பார்த்து ஈர்க்கப்பட்டுள்ளேன். இந்த வேலையை அவர் கிட்டத்தட்ட பாதி நேரம் செய்து வருகிறார்" என கூறினார்.

ரோஹித்தின் தெளிவான திட்டங்கள்

ரோஹித்தின் தெளிவான திட்டங்கள்

மேலும் விவிஎஸ் லக்ஷ்மன் கூறுகையில், "ரோஹித் வீரர்களை கையாண்ட விதம் நன்றாக இருந்தது. களத்தில் சுறுசுறுப்பாக இருந்தார். தெளிவான திட்டங்களை கொண்டிருந்தார். தேவைக்கேற்ப தன் திட்டங்களில் மாறுதல் செய்யவும் அவர் தயங்கவில்லை" என கூறினார்.

நான்காவது சதம் அடித்த ரோஹித்

நான்காவது சதம் அடித்த ரோஹித்

"ரோஹித் லக்னோவில் அடித்த நான்காவது டி20 சதம் பல காலத்துக்கு போதுமானது. மிக சில வீரர்களே நேர்த்தியாகவும், அதிக சக்தி கொண்டு அசாதரணமாக பேட்டிங் ஆடுவார்கள்" என லக்ஷ்மன் கூறினார். ரோஹித் சர்மா தான் தற்போது டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.

வெற்றி மேல் வெற்றி பெறும் ரோஹித்

வெற்றி மேல் வெற்றி பெறும் ரோஹித்

ரோஹித் சர்மா இலங்கை டி20 தொடர், நிதாஸ் தொடர், ஆசிய கோப்பை தொடர் மற்றும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர் என பல தொடர்களில் இந்திய அணிக்கு தலைமை ஏற்றுள்ளார். அதில் அனைத்திலும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா.

Story first published: Thursday, November 15, 2018, 17:07 [IST]
Other articles published on Nov 15, 2018
English summary
VVS Laxman praised Rohit Sharma captaincy after West Indies T20 series victory
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X