Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்.. இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. 2 முக்கிய வீரர்கள் விளையாடுவது சந்தேகம்

மும்பை: அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது. இந்த வெளிநாட்டுத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்னன.

தமிழகத்தைச் சேர்ந்தவரான இவருக்கு, கடந்த ஜூலை 16 அன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயம் ஏற்பட்டது. வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்ட் போட்டியைத் தவறவிடவுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா மற்றும் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் இந்தத் தொடர் முழுவதிலிருந்தும் விலக நேரிடலாம்.

Washington sundar

ஜூலை 7 அன்று நாட்டிங்ஹாமில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது ஹர்ஷித் ராணாவுக்கு காயம் ஏற்பட்டது. அதே சமயம், 2026 ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெற்ற இந்திய அணியின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, இடது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததால் நிதிஷ் குமார் ரெட்டி விலக நேரிட்டது.

IND vs ZIM: அபிஷேக் சர்மா 3 விக்கெட் எடுத்தாரு? அப்புறம் இந்த வீரர் இந்திய அணியில எதுக்கு?

IND vs ZIM: அபிஷேக் சர்மா 3 விக்கெட் எடுத்தாரு? அப்புறம் இந்த வீரர் இந்திய அணியில எதுக்கு?

இதற்கிடையில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் தேர்வு அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அமையும். ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பும்ரா, கடைசியாக 2025 நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், முழங்கால் காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை. தற்போதைய தகவல்களின்படி, பும்ரா ஜூலை 30 வரை ஓய்வில் இருப்பார், அதன் பிறகு அவர் பிசிசிஐ-யின் 'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' மையத்தில் ரிப்போர்ட் செய்வார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்திய அணி கடைசியாக 2017-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடருக்காக இலங்கை சென்றபோது, மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

வைபவ் சூர்யவன்ஷி எங்களுக்கு எல்லாம் தம்பி போன்றவர்.. ரொம்பவும் புத்திசாலி பையன்- இசான் கிஷன்

வைபவ் சூர்யவன்ஷி எங்களுக்கு எல்லாம் தம்பி போன்றவர்.. ரொம்பவும் புத்திசாலி பையன்- இசான் கிஷன்

இதற்கிடையில், இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் தொடர் 2022 மார்ச் மாதத்தில் நடைபெற்றது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதியடைவதற்கான வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள, 2026 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

Story first published: Sunday, July 26, 2026, 15:37 [IST]
Other articles published on Jul 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+