அடுத்தடுத்து அவுட்
தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா ஆட்டத்தின் முதல் பந்தியிலே ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கம் ஆக அமைந்தது. மற்றொரு தொடக்க வீரராக களம் இறங்கிய சூரிய குமார் யாதவும் 11 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 10 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 12 பந்துகளை எதிர் கொண்டு இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரிகள் விளாசி 24 ரன்கள் எடுத்தார்.
பொறுமையான ஆட்டம்
இந்திய அணி அதிரடியாக விளையாட முற்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக பவர் ப்ளேவில் 56 ரன்களை விளாசி இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதன்பிறகு நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய பிறகு பொறுமை காத்து 31 ரன்கள் அடித்தார்.
மெக்காய் 6 விக்கெட்
அவருக்கு ஜடேஜாவும் பக்க பலமாக நின்று 30 பந்துகளுக்கு 27 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் வெளியேற தமிழக வீரர் அஸ்வின் 10 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய அணி 19.4 ஓவரில் 138 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் மெக்காய் நான்கு ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா தோல்வி
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தொடக்க வீரர் பிராண்டின் கிங் 52 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இறுதியில் தேவன் தாமஸ் 19 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். இதில் இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டர்களும் அடங்கும் இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது .இந்திய அணியில் புவனேஸ்வர் குமாரை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.