
ப்ளேயிங் 11 குழப்பம்
இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா கடைசி நேர ட்விஸ்ட் கொடுத்துள்ளார். அதாவது ஓப்பனிங் வீரர் ஷிகர் தவான் கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்துவிட்டார். துணைக்கேப்டன் கே.எல்.ராகுலும் வந்துவிட்டார். எனவே தவானை ஓப்பனிங்கிற்கும் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்-ன் இடத்திற்கும் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதே போல சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் வருவார் என எதிர்பார்க்கபப்ட்டது.

ரோகித் கொடுத்த ட்விஸ்ட்
இந்நிலையில் அணியின் ப்ளேயிங் 11ல் ஒரே ஒரு முக்கிய மாற்றத்தை மட்டும் செய்துள்ளார் ரோகித் சர்மா. ஓப்பனிங்கில் இஷான் கிஷானுக்கு பதிலாக கே.எல்.ராகுல் மட்டும் மாற்றப்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்திய அணி ப்ளேயிங் 11
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சஹால்
Recommended Video

பிட்ச் நிலைமை
அகமதாபாத் மைதானத்தில் 2வதாக பேட்டிங் செய்யும் அணிக்கு தான் சாதகமாக இருக்கும். கடந்த போட்டியில் கூட இந்திய அணி 2வது பேட்டிங் தான் செய்திருந்தது. இதனால் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக விளையாட வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது.


Click it and Unblock the Notifications