மும்பை: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்றால் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள இந்த போட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை 9 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை 5 போட்டிகளில் வென்றும், 4 போட்டிகளில் தோல்வியடைந்தும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை கேன் வில்லியம்சன் டாஸ் வென்றால் உடனடியாக பேட்டிங்கை தேர்வு செய்து, இந்திய அணிக்கு சவால் அளிப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஒருவேளை கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தால், சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமமாகும். இதனால் அரையிறுதி போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று பார்க்கப்படுகிறது.