"சாமி"யைப் பார்த்து வளர்ந்தவனப்பா நானெல்லாம்.. சச்சின் குறித்து டோணி
நியூஜெர்சி: சச்சின் டெண்டுல்கர் தனக்கு சிறு வயதில் கடவுள் மாதிரி இருந்ததாக கிரிக்கெட் வீரர் டோணி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் டோணிக்கு வழிகாட்டியாக இருந்தவர், இருப்பவர் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர். அமெரிக்காவுக்கு சென்ற டோணி நியூஜெர்சியில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
சிறு வயதில் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆடுவதை பார்த்து வளர்ந்தேன். அவர் எங்களுக்கு எல்லாம் கடவுள் போன்று இருந்தார். அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருக்கும். சச்சின் ஒரு சிறந்த முன் மாதிரி. அவர் வெற்றிகரமானவராக இருந்தபோதிலும் தலைக்கனம் இல்லாமல் இருந்தார். அவர் ஒவ்வொரு முறை மைதானத்தில் நுழையும்போதும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
அக்டோபர் மாதம் நீங்கள் நான் கிரிக்கெட் விளைாடுவதை பார்க்கலாம். வாழ்க்கையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications