சென்னையில் போட்டி
சென்னையில் வரும் சனிக்கிழமை 2018 ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி நடக்க உள்ளது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையில் நடக்க உள்ளது. தற்போது இந்த தொடருக்குத்தான் தடை கேட்டு வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஏன் வழக்கு
ஐபிஎல் போட்டியில் இன்னும் சூதாட்டம் ஒழிக்கப்படவில்லை என்று இந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது. ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் ஒழிக்கப்படும் வரை, இதை விளையாட கூடாது என்று ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் குறிப்பிட்டு உள்ளார்.
யார் இவர்
இவர்தான் 2013ம் வருடம் நடந்த ஐபிஎல் சூதாட்டம் பற்றிய வழக்கை விசாரித்தது. கிட்டி என்ற சூதாட்டம் செய்யும் நபருக்கும் டோணி, குருநாத் மெய்யப்பனுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறது என்று இவர்தான் குற்றச்சாட்டு வைத்தார். அதன் காரணமாகவே சென்னை அணிக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது.
4 வருட தடை
ஆனால் இதே சம்பத் குமார்தான் பின் ஐபிஎல் சூதாட்டகாரர்களிடம் இருந்து பணம் பெற்றதாக கூறப்பட்டது. இதனால் இவர் அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் நான்கு வருடத்திற்கு பிறகு தமிழக அரசால் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டார்.