சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு தற்போது 41 வயதாகி விட்டது. ஆனால் பேட்டிங்கில் எப்போதும் போல் கலக்கி வருகிறார். இன்னும் சொல்லப் போனால், சிக்சர்களை அடித்து அசத்துகிறார்.
ஆனால், அனைவரின் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி, தோனி இவ்வளவு சிறப்பாக விளையாடி வரும். அவர் ஏன் கடைசி கட்டத்தில் பேட்டிங்கிற்கு வருகிறார் என்பது தான். அவர் முன்பே விந்திருந்தால், இன்னும் நிறைய பந்துகளை எதிர்கொண்டூ ரன் குவிக்கலாமே என்று தான் அனைவரும் யோசிக்கிறார்கள்.

நடப்பு ஐபிஎல் தொடரில், தோனி 35 பந்துகளை மட்டும் தான் பிடித்திருக்கிறார். ஆனால், அவர் அடித்தது 74 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 211 என்ற அளவில் இருக்கிறது. சிஎஸ்கே 9 போட்டியில்விளையாடி இருக்கிறது. தோனி வெறும் 6 முறை தான் பேட்டிங் செய்ய களத்துக்கு வந்துள்ளார்.
தோனிக்கு மூட்டுவலி இருப்பதால், அவரால் ரன்கள் ஓட முடியவில்லை. பேட்டிங் செய்ய முன்பே களமிறங்கினால் ரன்கள் ஓட வேண்டி இருக்கும். இதனை தவிர்ப்பதற்கு தான், முன்பே களமிறங்குவதில்லை. அதற்கு அடுத்த படியாக தோனியின் பலமே இறுதிக் கட்டத்தில் சிக்சர் அடிப்பது தான்.
இதனால், இம்முறை அவர் பின்ச் ஹிட்டர் அதாவது வரும் பந்தை எல்லாம் பேட்டால் சுற்றி, 7 பந்தில் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற பணியை எடுத்து கொண்டுள்ளார். இதுவே தோனி முன்பு களத்திற்கு வந்தால், மெதுவாக ரன்கள் ஓடி, பிறகு தான் அதிரடியாக விளையாட வேண்டும்.
இதனால் சிஎஸ்கேவின் ரன் குவிக்கும் வேகம் குறைந்துவிடும் என்பதால், தோனி மற்ற பேட்ஸ்மேன்களை முன்பு விளையாட வைக்கிறார். இதே போன்று, மற்ற இளம் வீரர்ககைளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தோனி இந்த தியாகத்தை செய்திருக்கலாம்.