டெல்லி: விராட் கோலி சதம் விளாசியதற்கு நான் எதற்காக வாழ்த்து கூற வேண்டும் என்று இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் பத்திரிகையாளர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 101 ரன்களை விளாசினார்.

அதுமட்டுமல்லாமல் இந்திய வீரரின் சாதனை பட்டியல்களை இலங்கை அணி கேப்டன் அறிந்து கொள்ள தேவையில்லை. விராட் கோலிக்கு பாராட்டு விழா நடத்தினால், அந்த விழாவில் குசல் மெண்டிஸ் பங்கேற்றால் அவரிடம் இதுபோன்ற கேள்விகளை எழுப்பலாம். டெல்லியில் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்களின் பயிற்சி பற்றிய கேள்வியை கேட்காமல் விராட் கோலி பற்றி கேள்வி எழுப்பியது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.