
அணி
இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் நேற்று வெளியானது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பாண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எப்படி
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறவில்லை. இவர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 3 விக்கெட் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் நன்றாக பவுலிங் செய்தாலும் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை .

காரணம்
இந்த நிலையில் இவர் டெஸ்ட் போட்டியில் எடுக்கப்படாதது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்பின் நடராஜன், சுயமாக லீவ் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் இவர் இணைந்த போதுதான் இவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் இந்தியாவிற்காக ஆட வேண்டும் என்பதால் இவர் தனது குழந்தையை பார்க்கவில்லை.

பாண்டியா
மாறாக பாண்டியா, கோலி போன்ற மூத்த வீரர்கள் தங்கள் குழந்தையை பார்ப்பதற்காக இந்தியா வந்தனர். நடராஜன் அறிமுக வீரர் என்பதால் வாய்ப்பை தக்க வைக்க ஆஸ்திரேலியாவிலேயே தங்கிவிட்டார். இந்த நிலையில்தான் குழந்தையை பார்ப்பதற்காக நடராஜன் பேட்டர்னிட்டி லீவ் எடுக்க உள்ளார் .

முதல் இரண்டு டெஸ்ட்
இதனால் இவர் டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. அதேபோல் இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் இப்போது வாய்ப்பு கிடைக்காது. பெரும்பாலும் நடராஜன் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக ஆடுவார் என்று கூறப்படுகிறது. மற்றபடி இந்திய அணியில் நடராஜன் எந்த விதமான புறக்கணிப்பையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











