ரோஹித்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது
ரோஹித் சர்மா கடைசியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் இந்த ஆண்டு துவக்கத்தில் இடம் பிடித்தார். அந்த தொடரில் ரோஹித் ரன் குவிக்கவில்லை என்ற காரணத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் மறுக்கப்பட்டது. மீண்டும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் இடம் கிடைக்கவில்லை.
ஏன் ரோஹித் சர்மாவை மட்டும் நீக்க வேண்டும்?
இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார். சேவாக் இது பற்றி கூறுகையில், "இலங்கை அணிக்கு எதிராக ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்தார் ரோஹித். பின் தென்னாபிரிக்காவில் சரியாக ஆடவில்லை. அதோடு அவரை ஏறக்கட்டி விட்டார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. எத்தனை பேட்ஸ்மேன் தென்னாபிரிக்காவில் ரன் குவித்துள்ளார்கள்? ஏன் ரோஹித் சர்மாவை மட்டும் நீக்க வேண்டும்?" என நெத்தியடி கேள்வி கேட்டுள்ளார் சேவாக்.
எல்லாம் தலைகீழாக நடக்கிறது
மேலும், "தேர்வாளர்கள் இதற்கு பதில் கூற வேண்டும். ரோஹித்தை ஏன் நீக்கினீர்கள்? ஒருநாள் போட்டிகளில் அவர் மூன்று இரட்டை சதம் அடித்துள்ளார். டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காத அளவு அப்படி என்ன மோசமாக ஆடிவிட்டார்? உலகத்தில் ஒருநாள் போட்டியில் ரன் குவித்து விட்டு டெஸ்ட் அணியில் ஆடாமல் இருக்கும் ஒருவரை பார்க்க முடியுமா? இங்கே எல்லாம் தலைகீழாக நடக்கிறது" என விளாசினார் சேவாக்.
சேவாக் கேட்பது நியாயமான கேள்வி
சேவாக் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நியாயமான கேள்வியே. ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளில், அவருக்கு ஏன் சரியான டெஸ்ட் வாய்ப்புகள் கிடைக்கவில்லை? யாரவது கூறினால் நன்றாக இருக்கும்.