For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பும் சுப்மான் கில்.. ருத்துராஜ்க்கு ஏன் வாய்ப்பு தரவில்லை

மும்பை : இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சுப்மான் கில் அறிமுகமானார். அப்போதே இது தவறான முடிவு என்று பிசிசிஐக்கு பலரும் கோரிக்கை வைத்ததனர்.

தற்போது சுப்மான் கில் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட வெறும் 5,7 ரன்களை மட்டு எடுத்திருக்கிறார். ரோகித், ராகுல் தொடக்க ஜோடி சரியில்லை என்று தான் புதிய ஜோடிக்கு பிசிசிஐ வாய்ப்பு தந்தது.

ஆனால், அவர்களும் இப்படி மோசமாக செயல்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது,. இதில் இஷான் கிஷன் கூட முதல் ஆட்டத்தில் அடித்து விட்டார். சுப்மான் கில் விசயத்தில் என்ன தவறு நடந்தது என்பதை தற்போது காணலாம்.

முதல் ஓவரில் இஷான் கிஷனின் சாதனை.. இலங்கை வீரரை வெளுத்து வாங்கினார்.. சுப்மான் கில் ஏமாற்றம் முதல் ஓவரில் இஷான் கிஷனின் சாதனை.. இலங்கை வீரரை வெளுத்து வாங்கினார்.. சுப்மான் கில் ஏமாற்றம்

தேவையில்லாத முடிவு

தேவையில்லாத முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த விளையாடி வருவதால் மூன்று கிரிக்கெட் வடிவத்திற்கும் மூன்று அணி தேவை என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த நிலையில் சுப்மான் கில் ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள் அணியில் விளையாடி வருகிறார்.தற்போது அவரை டி20 அணியிலும் சேர்ப்பது சரியான அணுகுமுறை கிடையாது. ஏற்கனவே வாய்ப்புக்காக பிரித்வி ஷா, ருத்துராஜ் கெய்க்வாட் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

காத்திருக்கும் வீரர்கள்

காத்திருக்கும் வீரர்கள்

பிரித்வி ஷாவை டி20 போட்டியில் பயன்படுத்த நல்ல தேர்வாக இருப்பார். இல்லை என்றால் ருத்துராஜ் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு பெயரை வாங்கி கொண்டு இந்திய அணியின் கதவை வாய்ப்புக்காக தட்டி கொண்ட இருக்கிறார். இந்த நிலையில், வர்களை பயன்படுத்தாமல் மூன்றாவதாக ஒரு வீரரை தேர்வு செய்வது என்பது குழப்பத்தை தான் அதிகரிக்கும்.

ஆட்டத்தை பாதிக்கும்

ஆட்டத்தை பாதிக்கும்

ருத்துராஜ்க்கும், பிரித்வி ஷாக்கும் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், சுப்மான் கில்லுக்கு மட்டும் ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் இந்திய அணி இந்த ஒரு மாதத்தில் தொடர்து டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என விளையாடுகிறது. இதில் அனைத்திலும் சுப்மான் கில் விளையாடினால் அவர் உடல் தகுதி தான் என்ன ஆகும். அவருடைய ஆட்டத்தின் திறனையே தற்போது கெடுத்து விட்டது.

மீண்டும் சேத்தனுக்கு வாய்ப்பு

மீண்டும் சேத்தனுக்கு வாய்ப்பு

இது போன்ற மோசமான முடிவை எடுக்கும் சேத்தன் சர்மாக்கு தான் தற்போத பிசிசிஐ மீண்டும் தேர்வுக்குழு தலைவராக வாயப்பு வழங்க உள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ருத்துராஜ்க்கு வாய்ப்பு தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழந்துள்ளது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் பாசம் ஹர்திக் பாண்டியாவை தடுத்து விடுமா என்ற கேள்வி எழந்துள்ளது.

Story first published: Friday, January 6, 2023, 12:16 [IST]
Other articles published on Jan 6, 2023
English summary
Why Shubman gill selection in t20 team is not a good idea
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X