
தண்ணிக்குள் ஹெலிகாப்டர்
உங்களது ஹெலிகாப்டர் ஷாட் மிஸ் ஆவது போல தெரிகிறதே.. என்ற நிருபர்களின் கேள்விக்கு, கடலுக்கு அடியிலுள்ள நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் எப்படி புறப்படும், என்று பதில் கேள்வி கேட்டார் டோணி.

பந்தே போடலை
ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதற்கு யார்க்கர் அல்லது ஓவர் பிட்ச் வகை பந்துகள் வீசப்பட்டிருக்க வேண்டும். தனக்கு அப்படிப்பட்ட பந்துகள் வீசப்படுவதில்லை என்பதை நீர்மூழ்கி கப்பல் கதையை உதாரணம் காட்டி பேசினார் டோணி.

ஸ்டூல்தான் போடனும்
மேலும் அவர் கூறுகையில், எனக்கு பவுன்சர் பந்தை வீசும்போது நான் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்க வேண்டுமானால், ஒரு நாற்காலி போட்டு ஏறிதான் நிற்க வேண்டும் என்றார் சிரித்தபடி.

பட்டையை கிளப்பிய பாண்ட்யா
ஹர்திக் பாண்ட்யா பற்றி டோணி கூறுகையில், அவருக்கு சர்வதேச போட்டிகளில் ஆடி அனுபவம் வர வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே களமிறக்கினேன். பாண்ட்யா எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக பெரிய ஷாட்டுகளை அடிக்க கூடிய திறமைசாலி என்பதை அறிந்துதான் அவ்வாறு செய்தேன்.

கூர்தீட்டுவோம்
உலக கோப்பை டி20 போட்டிகளை முன்னிட்டு இதுபோன்ற சோதனை முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்படும். அனைத்து பேட்ஸ்மேன்களின் திறமையையும் கூர்தீட்டிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று டோணி தெரிவித்தார்.

என்னை பாருங்க
யுவராஜ்சிங்கை முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறக்குவதில்லையே ஏன் என்ற கேள்விக்கு, யுவராஜ் சிங் களமிறங்குவதை பற்றி மட்டுமே பேசுகிறீர்களே, நான் மேலும், கீழும் ஊசலாட்டத்தோடு களமிறங்கிக் கொண்டுள்ளதை பற்றி யாருமே கேட்பதில்லையே என்று சிரித்தபடி கூறினார் டோணி.

முன்கூட்டி இறக்க முடியாது
இருப்பினும், யுவராஜ்சிங் விவகாரம் கொஞ்சம் சீரியசானது என்பதை உணர்ந்து பதில் அளித்த டோணி, போட்டி ஆரம்பிக்கும்போது யுவராஜ்சிங்கை 5வதாக களமிறக்குவதுதான் திட்டமாக இருக்கிறது. ஏனெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து, 3வதாக விராட் கோஹ்லி, 4வதாக சுரேஷ் ரெய்னா களமிறங்க வேண்டியுள்ளது.

பெஸ்ட் பேட்ஸ்மேன்கள்
முதல் நான்கு பேட்ஸ்மேன்களும், உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டு மண்ணிலும் பல சாதனைகளை புரிந்தவர்கள். எனவே அவர்கள் இடத்தை யுவராஜுக்கு பங்கிட்டு கொடுப்பது என்பது இயலாது.

அந்த வேலைக்கு சரிபடமாட்டாரு
யுவராஜ்சிங் அணிக்கு திரும்பியுள்ளார் என்பது உண்மைதான். ஆனால், அவருடன் ஆடிய அனுபவத்தில் சொல்கிறேன், களமிறங்கிய உடன் அவரால் பெரிய ஷாட்டுகளை அடிக்க முடியாது. சிறிது நேரம் எடுத்த பிறகே அடிக்க முடியும். எனவேதான், 17 ஓவர்களுக்கு பிறகு அவர் இறங்க வேண்டி வந்தால், அவரை களமிறக்குவதை தவிர்க்கிறேன்.

வாய்ப்பு கொடுப்பேன்
இனி வரும் போட்டிகளில் சூழ்நிலைக்கு தக்கபடி, யுவராஜ்சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும். என்னைப் பொறுத்தளவில் அணியின் வெற்றிதான் முக்கியம் என்பதால் அதற்கு ஏற்ப பேட்ஸ்மேன்களை களமிறக்குகிறேன். இவ்வாறு டோணி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











