For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளிர் ஐபிஎல் - 5 அணிகளுக்கான ஏலம் மூலம் ரூ. 4670 கோடி வருமானம்.. எந்த அணிகள் வாங்கியது.. விவரம்

மும்பை : மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஐந்து அணிகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் ஐந்து அணிகளை ஏலம் விட்டதன் மூலம் பிசிசிஐக்கு 4670 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அதன் செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

இது 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரை ஆரம்பித்த போது கிடைத்த தொகையை விட அதிகமாக தற்போது மகளிர் ஐபிஎல் தொடருக்கு கிடைத்திருப்பதாக ஜெய்ஷா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், கிரிக்கெட்டுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

புரட்சிகரமான தொடக்கம்

புரட்சிகரமான தொடக்கம்

இது தொடர்பாக ஜெய்ஷா வெளியிட்டுள்ள பதிவில், முதல் மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான ஏலம் நடைபெற்றது. இது 2008 ஆம் ஆண்டு ஆடவருக்கான முதல் சீசனுக்கு கிடைத்த பணத்தைவிட தற்போது அதிகமாக கிடைத்துள்ளது. மொத்தமாக பிசிசிஐக்கு 4669 கோடியே 99 லட்சம் ரூபாய் ஏலத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் புதிய புரட்சிகரமான தொடக்கமாக நான் இதைப் பார்க்கிறேன்.

சிறந்த நாள்

சிறந்த நாள்

மகளிர் கிரிக்கெட் தலை எழுத்தை மாற்றும் புதிய பாதையாக மகளிர் ஐபிஎல் இருக்கும் என நான் நம்புகிறேன். இது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொட்ட விளையாட்டு துறைக்கும் இது சிறந்த நாளாகும். மகளிர் கிரிக்கெட்டில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்களை மகளிர் ஐபிஎல் மேற்கொள்ளும். மகளிர் ஐ பி எல் பங்கேற்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதானி நிறுவனம்

அதானி நிறுவனம்

இந்த மகளிர் ஐ பி எல் ஐ மகளிர் பிரீமியர் லீக் என்று பிசிசிஐ பெயர் சூட்டி இருக்கிறது. வரலாற்றுப் பயணம் இன்றுடன் தொடங்குகிறது என்று ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார். இந்த ஏலத்தில் மொத்தம் 16 நிறுவனங்கள் பங்கேற்றது. இதில் அதிகபட்சமாக அதானி நிறுவனம் அகமதாபாத் அணியை 1289 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதன் அடுத்தபடியாக மும்பையை மையமாக வைத்து இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் 912 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வென்றிருக்கிறது.

 ஆர்சிபி அபாரம்

ஆர்சிபி அபாரம்

பெங்களூரை மையமாகக் கொண்ட அணியை ஆர்சிபி நிறுவனம் 900 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதேபோன்று டெல்லி அணியை 810 கோடி ரூபாய் கொடுத்து ஜே எஸ் டபிள்யூ ஜி எம் ஆர் கிரிக்கெட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. லக்னோ அணியை 757 கோடி ரூபாய் கொடுத்து கேப்ரி குளோபல் ஹோல்டிங் பிரைவேட் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

சென்னை அணி இல்லை

சென்னை அணி இல்லை

இந்த ஏலத்தில் ஆர் சி பி ஐ தவிர மற்ற எந்த ஐபிஎல் அணியும் மகளிர் அணியை வாங்காதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோன்று இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் தமிழகத்தை மையமாகக் கொண்டு எந்த அணியும் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த மகளிர் ஐ பி எல் ஐ 2027 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பு செய்ய ஜியோ நிறுவனம் 950 கோடி ரூபாய் கொடுத்து ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 25, 2023, 17:16 [IST]
Other articles published on Jan 25, 2023
English summary
Womens IPL - BCCI Gets 4670 crores after 5 teams auction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+