
16 அணிகள்
மொத்தம் 16 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதலில் வார்ம் அப் போட்டிகள்
போட்டித் தொடருக்கு முன்பாக வார்ம் அப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஒவ்வொரு அணிக்கும் 2 போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தர்மசலா - மொஹாலி
நான்கு மைதானங்களில் வார்ம் அப் போட்டிகள் நடைபெறம். முதல் சுற்றுப் போட்டிகளில் இடம் பெறும் அணிகளுக்கான வார்ம்அப் போட்டிகள் மார்ச் 3 முதல் 6ம் தேதி வரை தர்மசலா மற்றும் மொஹாலியில் நடைபெறும்.

கொல்கத்தா - மும்பை
அதேபோல 2வது சுற்றில் ஆடும் அணிகளுக்கான வார்ம் அப் போட்டிகள் மார்ச் 10ம் தேதி முதல் 15ம் தேதி கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறும்.

இந்தியாவுக்கான போட்டிகள்
இந்தியா மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான வார்ம் அப் போட்டி மார்ச் 10ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும். பின்னர் 12ம் தேதி மும்பையில் தென் ஆப்பிரிக்காவை அது சந்திக்கிறது.

நேரடியாக சூப்பர் 10 சுற்றுக்குத் தகுதி
இந்தியா நேரடியாக சூப்பர் 10 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் மார்ச் 15ம் தேதி அது நியூசிலாந்தை சந்திக்கவுள்ளது. இந்தியா, 2வது குரூப்பில் இடம் பெற்றுள்ளது. அதில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் முதல் சுற்றில் வெற்றி பெறும் அணி ஆகியவை இடம் பெறும்.


Click it and Unblock the Notifications