கொல்கத்தா: உலக கோப்பை டி20 இறுதி போட்டியில் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்தும்-மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான நடுவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கள நடுவர்களாக, குமார் தர்மசேனா, ராட் டக்கர் ஆகியோரும், 3ம் நடுவராக மராய்ஸ் எராமசும் பணியாற்றுவார்கள். ப்ரூஸ் ஆஸ்சன்போர்ட் 4வது நடுவராக பணியாற்றுவார். ரஞ்சன் மதுகலே போட்டி ரெஃப்ரியாக பணியாற்றுவார்.

நாளை பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் பெண்கள் அணிகளுக்கு நடுவேயான உலக கோப்பை டி20க்கான நடுவர் பட்டியலையும் ஐசிசி அறிவித்துள்ளது.
அலீம் தார் மற்றும் ரிச்சர்ட் இலிங்வொர்த் ஆகியோர் கள நடுவராக செயல்படுவார்கள். நிகல் லியாங் மூன்றாம் நடுவராகவும், ப்ரூஸ் ஆக்சன்போர்ட் நான்காவது நடுவராகவும் செயல்படுவார். ரஞ்சன் மதுகலே ரெஃபரியாக செயல்படுவார்.