
பிசிசிஐ நோட்டீஸ்
சாஹாவின் இந்த பேட்டி பிசிசிஐயில் பெரும் புயலை கிளப்பியது. இதனையடுத்து, தேர்வுக்குழு என்ன நினைக்கிறது என்று வீரர்களுக்கு தெரிய வேண்டும் என்பதாலேயே சாஹாவிடம் இதை கூறியதாக பயிற்சியாளர் டிராவிட் கூறினார். இந்த நிலையில், சாஹாவுக்கு விளக்கம் கேட்டு, பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது.

சாஹா புகார்
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து தமக்கு பேட்டி அளிக்குமாறு பத்திரிகையாளர் ஒருவர் தம்மை மிரட்டியதாகவும், பேட்டி அளிக்கவில்லை என்றால் பல எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறுஞ்செய்தியில் தெரிவித்ததாக சாஹா, ஸ்கிரின்ஷாட்டுடன் வெளியிட்டார்.

கிரிமினல் நடவடிக்கை
இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பலரும் சாஹாவிடம் அந்த நபர் யார் என்று கேட்டு வற்புறுத்தினர். அந்த பத்திரிகையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேவாக் உள்ளிட்ட வீரர்கள் தெரிவித்தனர். இது குறித்து பிசிசிஐயும் சாஹாவிடம் புகாரை தனிப்பட்ட முறையில் பெற்று கொண்டது.

பிசிசிஐ விதித்த தடை
இந்தி நிலையில், அது கங்குலியின் நண்பரான பத்திரிகையாளர் போரியா என்று தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் இந்தியாவில் உள்ள எந்த மைதானத்திலும் நுழைய 2 ஆண்டுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், ஐசிசி போட்டியிலும் உள்ளே நுழைய அனுமதி வழங்ககூடாது என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுத உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எந்த கிரிக்கெட் வீரர்களும் போரியாவுடன் தொடர்பில் இருக்க கூடாது என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











