For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாஹாவுக்கு நடக்கும் அநியாயம்.. புகார் அளித்த சாஹா மீதே நடவடிக்கை.. விளக்கம் அளிக்க பிசிசிஐ நோட்டீஸ்?

கொல்கத்தா: ஓய்வு பெறகோரி மறைமுகமாக அழுத்தம் தரப்பட்டது என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹா அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.

37 வயதான சாஹாவுக்கு ரிஷப் பண்ட்டின் வருகைக்கு பிறகு வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும் கிடைத்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்தவில்லை.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சாஹா இடம்பெறவில்லை.

சாஹா இல்லை

சாஹா இல்லை

சாஹாவுக்கு பதில் கே.எஸ் பரத் அணியின் 2வது விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். சாஹாவுக்கு இனி வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது, யாருக்கும் வாய்ப்பில்லை என்று தேர்வுக்குழு சொல்லாது. இது இலங்கை தொடருக்கான முடிவு தான் என சேத்தன் சர்மா கூறியிருந்தார். இதனால் சீனியர்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

மறைமுக அழுத்தம்

மறைமுக அழுத்தம்

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க தொடரின் போதே பயிற்சியாளர் டிராவிட், இனி தேர்வுக்குழு தமக்கு வாய்ப்பு வழங்காது. ஓய்வு பெறுவதை பற்றி யோசியுங்கள் என்று கூறி இருந்தார். இதே போல் இந்தியா வந்ததும், தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா இனி இளைஞர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். இனி உங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு இருக்காது என்று கூறியதாக சாஹா பேட்டி ஒன்றை அளித்தார்.

சிக்கல்

சிக்கல்

ஆனால், 3 மாதத்திற்கு முன்னால், கங்குலி என்னிடம் கூறினார். தாம் பதவியில் இருக்கும் வரை அணியில் தமக்கு இடம் இருக்கும் என்று சொன்னதாக சாஹா தெரிவித்தார். சாஹாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சேத்தன் சர்மா, கங்குலீ, டிராவிட் ஆகியோருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

Recommended Video

Wriddhiman Sahaவை மிரட்டிய Journalist! Dravid, Ganguly சொன்னது என்ன | OneIndia Tamil
சாஹாவுக்கு நோட்டீஸ்

சாஹாவுக்கு நோட்டீஸ்

இதனால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, தேர்வுக்குழுவில் நடந்த விசயம் குறித்து வெளிப்படையாக பேசியதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. மேலும், தனிப்பட்ட முறையில் தங்களிடம் கூறியதை வெளிப்படையாக பத்திரிகைக்கு பேட்டி அளித்ததன் மூலம் பிசிசிஐயின் ஒப்பந்தத்தை மீறியுள்ளதால், உடனடியாக விளக்கம் அளிக்கும் படி சாஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர் ஒருவரை சாஹா சிக்க வைத்ததால், அதன் பின் விளைவுகள் தான் இதுவா என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Story first published: Friday, February 25, 2022, 19:37 [IST]
Other articles published on Feb 25, 2022
English summary
Wriddhiman saha may receive notive from bcci for breach of contract சாஹாவுக்கு நடக்கும் அநியாயம்.. புகார் அளித்த சாஹா மீதே நடவடிக்கை.. விளக்கம் அளிக்க பிசிசிஐ நோட்டீஸ்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+