சவுத்தாம்டன் பிட்ச்
இங்கிலாந்து பிட்ச் நியூசிலாந்தில் இருப்பது போன்றே இருக்கும் என்பதால், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அது சாதகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களான ட்ரெண்ட் போல்ட், டிம் சவுத்தி, கெயில் ஜேமிசன் ஆகியோர் இந்திய வீரர்களை அச்சுறுத்த தயாராகி வருகின்றனர்.
முன்னாள் வீரர் அட்வைஸ்
இந்நிலையில் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா அறிவுரை கூறியுள்ளார். அதில் அவர், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தெளிவான சிந்தனையுடன் செயல்பட வேண்டும். எந்தவித புது முயற்சிகளும் எடுக்காமல் தங்களது இயல்பான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அதற்கென்று, ஆக்ரோஷமாக ஆடுவது தான் இயல்பான ஆட்டம் என்றால் அதனையே தொடர்ந்து செய்யக்கூடாது.
ரோகித்திற்கு டிப்ஸ்
தொடக்க வீரராக களமிறங்கப்போகும், ரோஹித் ஷர்மா கட் ஷாட், புல் ஷாட்களில் சிறப்பாக செயல்படக்கூடியவர். அதற்கென்று அனைத்தையும் அடித்து ஆட வேண்டுமென்பதில்லை. சரியான டைமிங்குடன் அமையும் பவுன்சர் பந்துகளை மட்டுமே பவுண்டரி அடிக்க வேண்டும். அதுவும் சரியான மன தெளிவுடன் இருந்தால் மட்டுமே முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் நிதானமாக செயல்படலாம். இந்த தெள்வு ரோகித்திடம் மிக முக்கியமாக இருக்க வேண்டும்.
ஓப்பனிங் எதிர்பார்ப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது ரோகித் சர்மா ஓப்பனராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பிட்ச் மிக கடினமானதாக இருந்த போதும் ரோகித் சர்மா ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் இங்கிலாந்தில் தற்போது தான் முதல் முறையாக ஓப்பனிங் களமிறங்கவுள்ளார். அவரின் ஆட்டம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.