தொடக்கம் சொதப்பல்
இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான தவான், கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் எதிர்பார்த்த அளவு பங்களிப்பை அளிக்கவில்லை. மாறாக விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.
இருவரும் அதிரடி
அடுத்து வந்த கோலியும், ரிஷப் பன்டும் அதிரடியாக ஆட தொடங்கினர். கடந்த 2 போட்டிகளில் மிக மோசமான பார்மில் இருந்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான பன்ட் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆடினார்.
பன்ட் 65 ரன்கள்
கோலியும், பன்டும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். கோலி 59 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பன்ட் 42 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் தலா 4 பவுண்டரிகளும், சிக்சர்களும் அடங்கும்.
புதிய சாதனை
அவரது இந்த ரன்னில் ஒரு முக்கிய சாதனையையும் படைத்துள்ளார். அதாவது, ரிஷப் பன்ட், தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் இது தானாகும்.
சிக்சர் பினிஷிங்
முன்னதாக தோனி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 56 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, தோனி பாணியில் சிக்சர் அடித்து ரிஷப் பன்ட் ஆட்டத்தை முடித்து வைத்தார் என்பது ஒரு ஸ்பெஷல்.