பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 2 கோடிக்கு இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 2 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
பஞ்சாப் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். இவருக்கு யாருமே ஏலம் கேட்கவில்லை. இரண்டு முறை இவர் ஐபிஎல் போட்டியில் மிகவும் அதிகமான விலைக்கு ஏலம் போய் இருக்கிறார்.
ஆனால் இந்த முறை குறைந்தபட்ச தொகைக்கு மட்டுமே இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.