மும்பை: முதலில் தகுதி பெறுங்கள், பின்னர் வெற்றி பெறுவது பற்றி பேசுங்கள் என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி தந்துள்ளார் யுவராஜ் சிங்.
உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் தோல்விக்குப் பிறகு வங்கதேசத்தை சந்தித்தது இந்தியா. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது.

ரோகித் ஷர்மா 92 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் அவர் 4 சதங்களை விளாசி இருக்கிறார். உலகக் கோப்பையில் அதிக சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் படைத்துள்ளார்.
நடப்பு உலக கோப்பையில் அதிக ரன்கள் (544) எடுத்த வீரர்களின் பட்டியலில் ரோகித் முதலிடத்தில் உள்ளார். இதை பாராட்டிய யுவராஜ் சிங் டுவிட்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
ரோகித் ஷர்மா தொடர் நாயகன் விருதுக்கு அருகில் செல்கிறார். ஹிட்மேன் யூ பியூட்டி 100 நம்பர் 4. மிகச் சிறப்பான ஆட்டம் சாம்பியன் என்று கூறியுள்ளார். அதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், விளக்கம் அளித்துள்ளார்.