டெல்லி : பிட்னஸ் காரணமாக ரோகித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் முன்னதாக இடம்பெறவில்லை.
மாறாக கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய அணியின் டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் பிட்னஸ் குறித்த தெளிவு பிசிசியிடம் இல்லை என்று முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் குறித்த புதிய பட்டியலில் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், ரோகித் சர்மாவின் பிட்னஸ் குறித்த தெளிவு பிசிசிஐயிடம் இல்லை என்று முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.
பிட்னஸ் இல்லை என்று கூறப்படும் நிலையில் அவர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்று விளையாடி 68 ரன்களை குவித்துளளதையும ம,ஞ்ச்ரேகர் சுட்டிக் காட்டியுள்ளார். பாகிஸ்தான் யூடியூப் சேனல் கிரிக்காஸ்ட்டில் பேசிய மஞ்ச்ரேகர் மக்களுக்கு தேவையான தெளிவு கிடைக்காதபோது சந்தேகம் எழுவது இயற்கைதான் என்று கூறியுள்ளார்.
இந்த தொடரில் வீரர்களுக்கு காயம் ஏற்படும் சூழலில் சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.