63வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 63வது போட்டி இன்றைய தினம் கோவாவின் பேம்போலிம்மில் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னையின் எப்சி மற்றும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதவுள்ளன. ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் முறையே 6வது மற்றும் 9வது இடங்களில் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன.
ஐதராபாத்துடன் மோசமான தோல்வி
இந்த சீசனின் தன்னுடைய தரமான ஆட்டங்களை சென்னையின் எப்சி அணி வெளிப்படுத்தவில்லை. கடந்த 5 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி கொண்டுள்ள இந்த அணி, 3 போட்டிகளை டிரா செய்துள்ளது. மேலும் ஐதராபாத் அணியுடன் 1க்கு 4 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது.
6வது இடத்தில் சென்னையின் எப்சி
இதுவரை ஆடியுள்ள 11 போட்டிகளில் 14 புள்ளிகளை பெற்று ஐஎஸ்எல் 2020-21 புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி அடுத்த கட்டத்திற் நகரும் தீவிரம் சென்னையின் அணியிடம் காணப்படுகிறது.
நிலையற்ற போட்டிகள்
இந்நிலையில் 11 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி. இந்த அணியும் இந்த தொடரில் நிலையற்ற மற்றும் மெதுவான ஆட்டங்களை ஆடி வருகிறது. இதுவரை இந்த தொடரில் ஆடியுள்ள போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் தீவிரம்
இந்நிலையில் இந்த தொடரில் தன்னுடைய இருப்பை காண்பிக்க விரும்பினால் அடுத்து வரும் போட்டிகளிலாவது சிறப்பான வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு உள்ளது. இதையடுத்து இன்று ஆடப்படும் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.