
24 ஆண்டுகளுக்குப்பின்னர்
ஜெர்மனியின் 22 வயது இளம் வீரர் மரியோ கோட்ஸே 113-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இதன் மூலம் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி மீண்டும் உலக சாம்பியன் ஆனது. அந்த அணிக்கு ரூ.210 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
4-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

நாடு திரும்பிய அணி
இந்நிலையில் வெற்றிக்கோப்பையுடன் ஜெர்மனி வீரர்கள் இன்று நாடு திரும்பினர். ரியோ டி ஜெனிரோவில் இருந்து பெர்லின் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திரண்ட ரசிகர்கள்
வெற்றிக் கோப்பையுடன் வரும் வீரர்களை வரவேற்க இன்று காலை முதலே ரசிகர்கள் திரண்டு வர ஆரம்பித்தனர். பிரண்டன்பர்க் கேட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தன.
வாழ்த்து முழக்கம்
பின்னர் வெளியில் வந்தபோது, விமான நிலையத்தின் வெளியில் வெள்ளமென திரண்டிருந்த மக்கள் வீரர்களை வாழ்த்தி கோஷமிட்டனர்.


Click it and Unblock the Notifications













