ரியோடி ஜெனிரோ: பிரேசிலை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு முழு கவனம் செலுத்திவருவதாக ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னணி வீரர் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டிகர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டிகர் கூறியதாவது:

அரையிறுதியில் பிரேசிலை சந்திப்பது ஜெர்மனிக்கு மிகுந்த கடினமான போட்டியாகும். போட்டியை நடத்தும் பிரேசிலுடன் விளையாடுவது கவுரவமான விஷயம். அதே நேரம், சொந்த ஊரில் பிரேசிலை சந்திப்பது கடினமான காரியம் என்பதால் அதை சாதிக்க, மிகுந்த முக்கியத்தும் கொடுத்து வருகிறோம்.
எங்களுக்கு மிகுந்த முக்கியமான போட்டி என்பதால் ஆட்ட வியூகத்தின்போது, பந்தை அதிக நேரம் எங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி எடுத்து வருகிறோம். பிரேசிலுடன், பைனலில் மோதத்தான் நாங்கள் ஆசைப்பட்டோம். ஆனால் அது நடக்காது. ஜெர்மனி அல்லது பிரேசில்தான் பைனலுக்கு செல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.