டோக்கியோ: டோணி, பெடரர், விஸ்வநாதன் ஆனந்த் போன்றோருக்கு வயதாகிவிட்டது, ஓய்வு பெற்றுவிடலாம் என்று பலர் விமர்சனம் கூறிவரும் வேளையில், 50 வயதாகும் கால்பந்து வீரரை, ஜப்பான் கால்பந்து கிளப் ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது விளையாடுவதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த கஜூயோஷி மியூரா, தேசிய அணிக்காக விளையாடியவர். அடுத்த மாதம், 51 வயதை நிறைவு செய்யும் அவரை, ஜப்பானின் புகழ்பெற்ற யோகஹாமா கால்பந்து கிளப் அணி, மேலும் ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.