115 போட்டிகள்
ஐஎஸ்எல் 2020 -21 தொடர் கடந்த நவம்பர் மாதத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு லீக் சுற்றுகளில் 95 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 115 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த மாதம் 28ம் தேதிவரை லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ப்ளே-ஆப் சுற்றிற்கு 2 அணிகள் தகுதி
இதன் இறுதிப்போட்டி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஏடிகே மோஹுன் பகன் அணி மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எப்சி அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளன. இந்த இரு அணிகளும் ஏற்கனவே ப்ளே-ஆப் சுற்றிற்கு தகுதிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 13ல் இறுதிப்போட்டி
இந்நிலையில் ப்ளே-ஆப் சுற்றிற்கான தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் முதல் கட்டமாகவும் மார்ச் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2வது கட்டமாகவும் அரையிறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிப்போட்ட மார்ச் 13ம் தேதி படோர்டாவில் நடைபெறவுள்ளது.
3வது முறையாக இறுதிப்போட்டி
ஐஎஸ்எல் இறுதிப்போட்டி தொடர்ந்து படோர்டாவில் நடத்தப்படவுள்ளது. மேலும் 3வது முறையாக இங்கு இறுதிப்போட்டி நடத்தப்பட உள்ளது. அரையிறுதிப் போட்டிகள் பாம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்திலும் படோர்டாவின் ஜேஎல் நேரு மைதானத்திலும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.