For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

பயிற்சியாளருடன் தொடரும் மோதல்.. பயிற்சியில் பங்கேற்கவில்லை.. சிக்கலில் சிக்கும் ரொனால்டோ!

தோஹா: பயிற்சியாளருடனான மோதல் காரணமாக போர்ச்சுகல் அணி வீரர்களுக்கான பயிற்சியில் ரொனால்டோ பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் போா்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சலாந்து அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் போா்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அணியின் தொடக்க வீரா்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இது ரசிகா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக களமிறங்கிய ரமோஸ் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினாா்.

ஒரு சீசனுக்கு ரூ.1,687 கோடி.. வலைவிரிக்கும் சவுதி அரேபியா கிளப்.. ஏற்பாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ? ஒரு சீசனுக்கு ரூ.1,687 கோடி.. வலைவிரிக்கும் சவுதி அரேபியா கிளப்.. ஏற்பாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?

என்ன காரணம்?

என்ன காரணம்?

முக்கியமான நாக் அவுட் போட்டியில் ரொனால்டோ களமிறங்காததற்கு குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவிடம் போா்ச்சுகல் அணி தோல்வியடைந்ததே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் ரொனால்டோ பாதியில் வெளியேற்றப்பட்டு மாற்று வீரா் களமிறக்கப்பட்டாா். அதற்கு ரொனால்டோ அதிருப்தி தெரிவிக்க, அணியின் பயிற்சியாளா் ஃபொ்னாண்டோ சான்டோஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ரொனால்டோ - சாண்டோ மோதல்

ரொனால்டோ - சாண்டோ மோதல்

இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட, பின்னா் சமரசமானதாக சான்டோஸ் தெரிவித்தாா். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ தொடக்க லெவனில் சோ்க்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் ரொனால்டோ, இதுவரை நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்ததில்லை என்று காரணமும் முக்கியத்துவம் பெற்றது.

பயிற்சியில் பங்கேற்பு?

பயிற்சியில் பங்கேற்பு?

இந்த நிலையில் சப்ஸ்டிட்யூட்களுக்கான பயிற்சியை ரொனால்டோ தவிர்த்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சிக்கு வராமல் ஜிம்மிலேயே பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரொனால்டோ அணியில் இருந்து வெளியேற உள்ளதாகவும் சலசலப்புகள் எழுந்துள்ளன. இதனிடையே பயிற்சியாளர் சாண்டோ கூறுகையில், எனக்கு என்ன யுக்தி சரியென்று படுகிறதோ, எதை நான் நம்பிகிறேனோ, அதனை களத்தில் செயல்படுத்துவேன் என்று தெரிவித்தார்.

ரொனால்டோ பதிவு

ரொனால்டோ பதிவு

இந்த நிலையில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியில் இருப்பவர்கள் அணியில் உடைக்க முடியாத அளவிற்கு ஒற்றுமையாக உள்ளோம். தங்களின் கனவை எட்டிப்பிடிக்கும் வரை போராடுவதே அணி என்பதற்கு முழுமையான அர்த்தம். எங்களுக்கு நம்புங்கள் என்று ரசிகர்களிடையே ஆதரவு வேண்டியுள்ளார். இதன் மூலம் அணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, December 9, 2022, 0:41 [IST]
Other articles published on Dec 9, 2022
English summary
It has been reported that Ronaldo did not participate in the training of the Portugal team due to a conflict with the coach.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X