என்ன காரணம்?
முக்கியமான நாக் அவுட் போட்டியில் ரொனால்டோ களமிறங்காததற்கு குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவிடம் போா்ச்சுகல் அணி தோல்வியடைந்ததே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் ரொனால்டோ பாதியில் வெளியேற்றப்பட்டு மாற்று வீரா் களமிறக்கப்பட்டாா். அதற்கு ரொனால்டோ அதிருப்தி தெரிவிக்க, அணியின் பயிற்சியாளா் ஃபொ்னாண்டோ சான்டோஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
ரொனால்டோ - சாண்டோ மோதல்
இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட, பின்னா் சமரசமானதாக சான்டோஸ் தெரிவித்தாா். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ தொடக்க லெவனில் சோ்க்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் ரொனால்டோ, இதுவரை நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்ததில்லை என்று காரணமும் முக்கியத்துவம் பெற்றது.
பயிற்சியில் பங்கேற்பு?
இந்த நிலையில் சப்ஸ்டிட்யூட்களுக்கான பயிற்சியை ரொனால்டோ தவிர்த்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சிக்கு வராமல் ஜிம்மிலேயே பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரொனால்டோ அணியில் இருந்து வெளியேற உள்ளதாகவும் சலசலப்புகள் எழுந்துள்ளன. இதனிடையே பயிற்சியாளர் சாண்டோ கூறுகையில், எனக்கு என்ன யுக்தி சரியென்று படுகிறதோ, எதை நான் நம்பிகிறேனோ, அதனை களத்தில் செயல்படுத்துவேன் என்று தெரிவித்தார்.
ரொனால்டோ பதிவு
இந்த நிலையில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியில் இருப்பவர்கள் அணியில் உடைக்க முடியாத அளவிற்கு ஒற்றுமையாக உள்ளோம். தங்களின் கனவை எட்டிப்பிடிக்கும் வரை போராடுவதே அணி என்பதற்கு முழுமையான அர்த்தம். எங்களுக்கு நம்புங்கள் என்று ரசிகர்களிடையே ஆதரவு வேண்டியுள்ளார். இதன் மூலம் அணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.