சென்னை: 2000ம் ஆண்டில் அலைபாயுதே படம் வெளியான பிறகு பல இளைஞிகளின் கனவு நாயகனாக விளங்கிய சாக்லேட் பாய் ஆர். மாதவனுக்கு மற்றொரு திறமை இருப்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நடிப்பில் பலருடைய பாராட்டை பெற்றுள்ள அவர், மிகச் சிறந்த கோல்ப் வீரராகவும் உள்ளார். தேசிய கோல்ப் போட்டியின் பைனலுக்கு அவர் முன்னேறியுள்ளார்.
மெர்சிடஸ் கோப்பை மும்பை பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் 69.6 புள்ளிகள் எடுத்து, தேசிய கோல்ப் போட்டிக்கு Dbjd தகுதி பெற்றுள்ளார்.
47 வயதாகும் மாதவன், வரும் ஏப்ரல் 4-6ல் புனேயில் நடக்க உள்ள பைனல்ஸ் போட்டியில் பங்கேற்ற உள்ளார்.