
பாராலிம்பிக் போட்டிகள்
வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலுதூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொண்டு விளையாடி வருகிறது. ஐந்தாவது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் காலிறுதிச்சுற்றில் மோதினார். அதில் வெற்றி பெற்று ஒரு பதக்கத்தையும் இந்தியாவுக்கு உறுதி செய்துள்ளார்.

மற்றொரு ஈட்டி எறிதல்
இந்நிலையில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இன்று இறுதிப்போடி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த ரஞ்சித் பாட்டி பங்கு பெற்றிருந்தார். ஆனால் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி செய்தியே காத்திந்தது. ரஞ்சீத் பாட்டி பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றிருந்தார். ஆனால் பாராலிம்பிக்கில் அது பொய்யாகியுள்ளது.

இறுதிச்சுற்று
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஒவ்வொரு வீரருக்கும் மொத்தம் 6 வாய்ப்புகள் தரப்படும். அதில் அதிகபட்ச தூரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதன்படி மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் ஈட்டியை வீசிய ரஞ்சீத் பாட்டி, முதல் வாய்ப்பிலேயே ஃபவுலாக வீசினார். மீதமுள்ள 5 வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றாவது அதிகபட்ச தூரத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

தகர்ந்தது கனவு
ஆனால் தனக்கு வழங்கப்பட்ட 6 வாய்ப்புகளிலும், ஃபவுலாக ஈட்டியை வீசி ஏமாற்றம் கொடுத்தார். இதனால் ரஞ்சீத் பாட்டியின் பாராலிம்பிக் பதக்க கனவு தகர்ந்தது. ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவை போல், பாராலிம்பிகில் இருப்பார் எனக்கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications