பெங்களூரு : புரோ கபடி 2022ஆம் ஆண்டு சீசனில் தமிழ் தலைவாஸ் அணி 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இன்று தமிழ் தலைவாஸ் அணி தனது 14வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் விளையாடினர்.
தமிழ் தலைவாஸ் அணி Defend செய்வதில் கில்லாடியாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆட்டத்தில் அது வேலை செய்யாமல் வெற்றி கிடைக்கவில்லை. கடைசியாக விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெறவில்லை. அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தமிழ் தலைவாஸ் அணி இன்று விளையாடியது
போட்டியின் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணி சற்று தடுமாறியது. 4க்கு2 என்ற கணக்கில் பெங்களூரு முன்னிலை பெற, பின்னர் சுதாரித்து கொண்டு விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி அதிரடியை காட்ட தொடங்கினர். கில்லி சரவண வேலு மாதிரி ரைடு சென்று புள்ளிகளை குவித்தனர். இதனால் புள்ளிகள் பெங்களூருவை விட இரட்டிப்பானது.
பெங்களூரு அணியை அடுத்தடுத்து ஆல் அவுட் செய்தது தலைவாஸ் அணி..இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 42க்கு24 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று அசத்தியது. விளையாடிய 14 போட்டியில் நான்கு வெற்றி, நான்கு தோல்வி, 6 டிராவுடன் 39 புள்ளிகளுடன் 9வது இடத்தில் தமிழ் தலைவாஸ் அணி உள்ளது.