For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக்.. பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 67வது இடம்

By Veera Kumar

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில், ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கிய 31வது ஒலிம்பிக் போட்டிகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நிறைவடைந்தது.

இந்த ஒலிம்பிக்கில் 207 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 15 விளையாட்டு போட்டிகளில், 118 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Rio Olympics closed

மரக்கானா மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020ம் ஆண்டு ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. எனவே ஒலிம்பிக் ஜோதியை டோக்கியோ ஆளுநர் பெற்றுக்கொண்டார்.

46 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 121 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. கிரேட் பிரிட்டன் 2வது இடமும், சீனா மூன்றாவது இடமும் பிடித்தன. ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே பதக்கங்களை பெற்ற இந்தியா, 67வது இடத்தை பிடித்தது.

Story first published: Monday, August 22, 2016, 13:53 [IST]
Other articles published on Aug 22, 2016
English summary
Rio Olympics winds the 17-day carnival up with some festivity.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+