மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சர்வதசே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் பிசிசசிஐக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து சச்சின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நான் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் உலகக் கோப்பை வெல்லும் அணியில் இருக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.
2015ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பையை வெல்ல விரைவில் அதற்குத் தேவையான நடிவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டவனாக உள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
சச்சின் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1989ம் ஆண்டு முதன்முதலாக சர்வதசே ஒரு நாள் போட்டியில் விளையாடத் துவங்கினார். தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் சச்சின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.