சென்னை: பந்து வீச்சுப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து என்னை நீக்கியது வருத்தம் தருகிறது, வலிக்கிறது என்று கூறியுள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.ஒரு இமெயில் மூலம், நீங்கள் நீக்கப்பட்டு விட்டீர்கள் என்று தகவல் தெரிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் கமிட்டி. இதனால் வெங்கடேஷ் பிரசாத் வருத்தமடைந்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. வலிக்கிறது.காலையில்தான் (நேற்று) எனக்கு நீக்கம் குறித்த இமெயில் வந்தது. அதை நான் முழுமையாகப் படிக்கவில்லை. பெரும் ஏமாற்றமாக உள்ளது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட இப்போது நான் வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா சரியாக பந்து வீசாததால் நான் நீக்கப்பட்டதாக கருதவில்லை. இஷாந்த் நல்ல பவுலர். கடினமான உழைப்பாளி. நிச்சயம் அவர் தனது பார்முக்குத் திரும்பி வருவார் என்றார் பிரசாத்.இந்தியாவுக்காக 33 டெஸ்ட் மற்றும் 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் பிரசாத்.