
ஆலன் கோகவேவுடன் மோதத் தயாரானபோது
மாஸ்கோ மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நான் ரஷ்ய வீரர் ஆலன் கோகவேவை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த அணியைச் சேர்ந்த ஒருவர் என்னை அணுகினார். போட்டி குறித்துப் பேச வேண்டும் என்று கூறினார்.

பணம் தர்றோம்ங்க.. தோத்துருங்க..
நான் அவரிடம் பேசியபோது, ரஷ்ய வீரருக்கு சாதகமாக தோற்று விடுமாறும், பெரும் பணம் தருவதாகவும் அவர் கூறினார். அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.

கோடிகளில்
அவர் கொடுப்பதாக சொன்ன பணம் சாதாரணமானதல்ல, சில கோடிகள் ஆகும். அது ஒரு மல்யுத்த வீரருக்கு பெரும் பணம்தான். ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன். எனக்கு என் நாட்டின் பெருமையும், எனது வெற்றியும்தான் முக்கியமாக தெரிந்தது.

அடித்து நொறுக்கி வென்றேன்
அந்த இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றேன் என்று கூறியுள்ளார் சுஷில் குமார்.


Click it and Unblock the Notifications











