மும்பை: ஐபிஎல் சாம்பியன்ஸ் லீக் தொடர் சீசன் 1 ரத்து செய்யப்பட்டதை அடுத்து அத்தொடரில் பங்கேற்கவிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலா ரூ. 10.4 கோடி நஷ்டஈடும் வழங்கப்பட இருக்கிறது.கடந்த 2008ல் நடந்த ஐபிஎல் சீசன் 1 தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மற்றும், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த தலா இரண்டு அணிகள் என 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடக்கவிருந்தது.ஆனால், மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியதை அடு்த்து இத்தொடர் கைவிடப்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் அமைப்பிடம் நஷ்டஈடு கேட்டு வந்தன.இந்நிலையில் இது குறித்து ஐபிஎல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐபிஎல் ஒப்பந்தப்படி இந்திய சிமின்ட்ஸ் நிறுவனத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் எமர்ஜிங் மீடியா நிறுவனத்தின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலா ரூ. 10.4 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்றார்.சாம்பியன்ஸ் லீக் தொடர் சீசன் 2 வரும் அக்டோபர் 3ம் தேதி துவங்கிவிருக்கிறது. இதில் இந்தியாவை சேர்ந்த டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் என மூன்று அணிகள் உட்பட 12 அணிகள் பங்கேற்கி்ன்றன. #13;