சென்னை: செஸ் விளையாட்டில் ஐந்து முறை உலகசாம்பியன் பெற்ற செஸ் விஸ்வநாதன் தாயார் சுசீலா விஸ்வநாதன் தன்னுடைய 77 வயதில் காலமானார்.
அவருக்கு விஸ்வநாதன் ஆனந்த் உட்பட ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த் அவரது கடைசி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு வயதிலிருந்தே, தன்னுடைய தாயாரான சுசீலாவுடன் இணைந்து சதுரங்கம் விளையாடி, கூர்மையான நினைவாற்றலை வளர்த்துக்கொண்டவர் விஸ்வநாதன் ஆனந்த்.
ஒரு சதுரங்க சங்கத்தின் உறுப்பினராக இருந்து வந்த இவருடைய தாயார் சுசீலா அவர்கள், சிறுவயதிலிருந்தே ஆனந்திற்கு சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொடுத்தார். எல்லாவிதத்திலும்
சுசீலா அவர்களின் இறுதிச்சடங்கு சென்னை பெசன்ட்நகர் மின்மயானத்தில் நாளை நடைபெறுகிறது.