லண்டன்: விம்பிள்டன் டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவு, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.
3வது சுற்று ஆட்டத்தில் அவர் டேட் கிரம்மை 6-2, 6-0 என்ற நேர் செட்களில் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிக் பிரான்ஸினன் ஜெரினி சார்டியை 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
நடப்பு விம்பிள்டன் போட்டிகளில் முன்னணி வீரர்கள் பலரும் சுருண்டு போய் அதிர்ச்சி வைத்தியம் அளித்த நிலையில் டாப் 20 வீரர்களில் தற்போது 8 பேர் மட்டுமே களத்தில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.