நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையறுதி போட்டியில் லைன் உமனை மிரட்டிய அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ்க்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இது தான் டென்னிஸ் போட்டிகளில் விதிக்கப்படும் அதிகபட்ச அபராத தொகையாகும்.பெண்கள் ஒற்றையரில் கடந்த 13ம் தேதி நடந்த அரையிறுதி போட்டியின் போது செரினா வில்லியம்ஸ், பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்சை எதிர்கொண்டார்.இப்போட்டியில் அதிகம் கோபப்பட்ட செரினா மைதனாத்தில் அநாகரிமாக நடந்து கொண்டார். முதல் செட்டை இழந்த போது டென்னிஸ் ராக்கெட்டை தூக்கி எறிந்து அதிர்ச்சி அளித்தார். மேட்ச் பாயின்ட்டின் போது லைன்உமனை திட்டி, மிரட்டினார். இதையடுத்து யுஎஸ் ஓபன் போட்டி நிர்வாகம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது. டென்னிஸ் மட்டையை தூக்கி எறிந்த காரணத்துக்காக ரூ. 20 ஆயிரமும், லைன் உமனை மிரட்டியதற்காக சுமார் ரூ. 4 லட்சத்து 80 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பியன்...நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி, ஜிம்பாப்வேயின் காரா பிளாக், அமெரிக்காவின் லிசல் ஹியூபர் ஜோடியை எதிர் கொண்டது. இதில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஜோடி 6-2, 6-2 என எளிதாக வென்று கோப்பை கைப்பற்றியது. #13;